திரு கந்தையா கோபாலபிள்ளை
யாழ். நெடுந்தீவு மேற்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கோபாலபிள்ளை அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்தி, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யோகநாதன்(சுவிஸ்), கணேசலிங்கம், பற்குணராசா, சண்முகலிங்கம்(கனடா), ஆனந்தஜோதி, காலஞ்சென்ற ஆனந்தலட்சுமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணபதிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதீஸ்வரி(சுவிஸ்), பரமேஸ்வரி, பிரியதர்ஷினி, சுபாஷினி(கனடா), கௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜீவிதன், சரண்யா, யருசிகா, செந்தூரன், கார்த்திகா, துவாரகா, ஜீவிகா, ஆனந்தராஜ், யுவன்ராஜ், கௌசியன், விஷ்ணுஜன், விபுசனா, விசாகன், மதுநிதன், ரஜீதா, ரசீதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெடுந்தீவு மேற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
யோகநாதன் – மகன் | |
+41763082546 | |
கணேசலிங்கம் – மகன் | |
+94776160162 | |
பற்குணராசா – மகன் | |
+94770429183 | |
சண்முகலிங்கம் – மகன் | |
+16478369087 | |
ஆனந்தஜோதி – மகன் | |
+94767641366 |