கலாநிதி. (திருமதி) கமலநாயகி (கமலா) நாகேந்திரா
(முன்னை நாள் சிரேஷ்ட விரிவுரையாளர் – கொழும்புப் பல்கலைக்கழக சட்டத்துறை, கொழும்பு சட்டக் கல்லூரி)
கலாநிதி. (திருமதி) கமலநாயகி (கமலா) நாகேந்திரா, முன்னை நாள் கொழும்புப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் கொழும்பு சட்டக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளரும், மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அல்வாய் மேற்கு – பருத்தித்துறை, கொழும்பு மற்றும் சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வியாழக்கிழமை அன்று மாலை இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் செல்லையா, தங்கம்மா செல்லையா ஆகியோரின் இளைய மகளும்,
சுப்பிரமணியம் நாகேந்திரா (முன்னை நாள் இயக்குனர், சீடில்ஸ் குரூப், கொழும்பு) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
கலாநிதி. (திருமதி) கமலநாயகி (கமலா) நாகேந்திரா, அவர்கள் குந்தவி (சிட்னி), Dr. வானதி (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வேதநாயகி கணபதிப்பிள்ளை (சிட்னி), Dr. செல்லையா பாலசுப்பிரமணியம் (UK) ஆகியோரின் அருமைச் சகோதரியாரும்,
ஜோன் போல் (சிட்னி), சூரியகுமாரன் (சிட்னி), ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஓவியா அமுதவாணி, மற்றயோ கீரன், நோவா மைரன் ஆகியோரின் செல்லப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி புதன்கிழமை மாலை 2:15 மணி தொடக்கம் 4:00 மணி வரை கிழக்கு சேப்பல், ராக்வுட் சுடுகாடு, சிட்னி, ஆஸ்திரேலியா என்ற முகவரியில் இடம்பெறும் என்பதை இத்தால் அறியத் தருகின்றோம்.
கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக நேரடியாகக் கலந்து கொள்வது மட்டுப்படுத்தப் பட்டுள்ளதால் கிரியைகளில் இணைய வழியாகக் கலந்து கொள்ளக் கூடிய இணைய முகவரி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
குந்தவி (மகள்) | |
+61406987872 | |
Dr. வானதி (மகள்) | |
+61412692340 | |
சூரியகுமாரன் (மருமகன்) | |
+61435517248 |