
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hanover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு ஈஸ்வரலிங்கம் அவர்கள் 06-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிர்தகௌரி(கௌரி) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,சுதர்ஜினி(சுஜி), சுபாஜினி(சுபா), சுதர்சன்(அகிலன்), சுதர்மதி(இந்து), சுதர்ஜெனா(ஜெனா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருபானந்தன், அகிலகுமார், தர்சிகா, ஜெயந்திரா, யெனார்த்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற விவேகம்மா, சிவபாதசுந்தரம், ராமச்சந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராஜா, நாகரெட்ணம், கனகரெட்ணம், கந்தசாமி, லோகாமித்திரை, சிவசோதி(கனடா), பர்வதகௌரி(இலங்கை), கனகாம்பிகை(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயலட்சுமி(கொழும்பு), அருந்தவராசா(கொழும்பு), வடிவாம்பிகை(பிரான்ஸ்), ஸ்ரீவதனி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,காலஞ்சென்ற மனோன்மணி, சந்தநாள், மகேந்திரநாதன், நடேசு(கொழும்பு), கலைஅரசி(கொழும்பு), புலேந்திரராஜா(பிரான்ஸ்), கிருபாமூர்த்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிவேதா, டிருஷ்சா, கிருஷ்சாந்த், ரக்ஷாந்த், அஸ்வீனா, அஸ்விஜன், அஸ்மித்தா, நிருஷ்சன், அனுஸ்சன், சயானா, சஞ்சய், சன்சிகா, இஷானா, றியான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| கிரியை | |
| Wednesday, 12 May 2021 11:00 AM – 1:00 PM | |
| Stadtfriedhof Lahe Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany |



