
பொன்னாவளை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.வைத்திலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 27.07.2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமுப்பிள்ளை வைத்திலிங்கத்தின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா (ஓய்வு பெற்ற உபஅதிபர் – காரைநகர் இந்துக் கல்லூரி),பாலசிங்கம் (பிரதம லிகிதர் – நீர்ப்பாசனத் திணைக்களம் வவுனியா) மற்றும் புவனேஸ்வரி (V.R.T),சங்கரப்பிள்ளை (தன்னை சித்தி விநாயகர் ஆலய அறங்காவலர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோன்மணி (பேபி டீச்சர்) (ஓய்வு பெற்ற ஆசிரியர்), பத்மாசனி, காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை (V.R.T – பிரபல வர்த்தகர் கிளிநொச்சி),சிவபாக்கியம்,காலஞ்சென்றவர்களான கனகம்மா,சுந்தரம்மா மற்றும் பாக்கியம்,பாலசிங்கம்,சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.07.2022 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு அன்னாரின் சகோதரரான சங்கரப்பிள்ளையின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனக்கிரியைக்காக தில்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:





