AriyalaiChulipuramJaffnaObituarySrilanka

திருமதி வரதராஜா வள்ளிநாயகி

யாழ். சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும் அரியாலை, சுழிபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வரதராஜா வள்ளிநாயகி அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாமி கந்தையா முத்தம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வியும், அரியாலையூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

வரதராஜா(ஓய்வுபெற்ற இ.போ.ச.உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஷ்(சுவிஸ்), சுனித்தா(அவுஸ்ரேலியா), சுபானி(லண்டன்), ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சசிலேகா(சுவிஸ்), யோகேஸ்வரன்(அவுஸ்ரேலியா), தயாபரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, நடராஜா, சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாரிகா, நிர்சனா, சஞ்ஜெயன், துர்க்கா, அக்‌ஷயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கந்தசாமி, சிவபாலசிங்கம்(துரை), நாகேந்திரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2024 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப. 11.00 மணியளவில் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வரதராஜா – கணவர்
+94755040219
சுனிதா – மகள்
+61424723363
சுபானி – மகள்
+447985195030

Related Articles