யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி அம்பாள் சிவபாதம் அவர்கள் 23-01-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனோன்மணி தாமோதரம் தம்பதிகளின் புதல்வியும், தெய்வானை சதாசிவம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாதம்(MLT-MRI) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவரவி, ஜெயந்தினி, தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Veronic, நாகலிங்கம், காலஞ்சென்ற ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
Melissa, David, சுஜன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சரண்யா, சங்கீதா, மனிஷ், லும்பிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
கனடாவை வாழ்விடமாக கொண்ட நரசிங்கவேல், காலஞ்சென்றவர்களான சத்தியபாமா, கிருஷ்ணவேல், தங்கவடிவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 27-01-2023 வெள்ளிக்கிழமை மற்றும் 28-01-2023 சனிக்கிழமை ஆகிய நாட்களில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று மு.ப 11:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவரவி(Hello Ravi) – மகன் | |
+41793730830 +41763577198 | |
தர்சினி – மகள் | |
+447663482811 |