InuvilObituary

திருமதி இராசையா பாலதேவி

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசையா பாலதேவி அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்.

காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற நடராஜா, பஞ்சவர்ணம் மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலராஜன், விஜயகுமாரன், காலஞ்சென்ற ரஞ்சனா மற்றும் பாலஸ்காந்தன், மஞ்சுளா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மராணி, சூரியகலா(சாய்), ஆறுமுகதாஸ், காலஞ்சென்ற கௌரீஸ்வரி மற்றும் தவனாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வர்ஜினி, சுதாயினி(பிரான்ஸ்), அபிராமி(நெதர்லாந்து), ஆரணி, கல்யாணி, குமரகுருபரன், சிவசங்கரி, காலஞ்சென்றவர்களான பைரவி, பராபரன், பராதீபன், பத்மசுகி மற்றும் விஜிதா, லாவண்யா(கனடா), காலஞ்சென்ற யாதவன் மற்றும் கலையரசி(சுவிஸ்), வீரமணிகண்டன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சாகித்தியன், சர்வஜன், சகிஷ்னுயன், சாத்விக், சைந்தவி, ஜெனனிகா, ஆரணிகன், நிஷாந்தன், மித்ரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
தியட்டர் அடி,
K.K.S.வீதி,
இணுவில் மேற்கு,
இணுவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மஞ்சுளா – மகள்
+16478238381
ரஞ்சன் – மருமகன்
+14162776182
ராசு – மகன்
+94774937772
பாபு – மகன்

+94770554837
 

சின்னையா – மகன்
 

 +94765872836

Related Articles