ColomboJaffnaObituary

திருமதி பரமலிங்கம் கமலநாயகி

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் கமலநாயகி அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

துஸ்யந்தி அவர்களின் அன்புத் தாயாரும்,

நிஷாந்தன் அவர்களின் அன்பு மாமியாரும், 

அகரன், அபுயுக்தன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், 

லோகநாயகி, சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சபாரட்ணம், தர்மரட்ணம் , குணபாலசிங்கம், கனகலிங்கம் மற்றும் விஸ்வலிங்கம், பங்கையச் செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் சுந்தராம்பாள், சந்திராதேவி, நாகம்மா, காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

பவ்யா, நிலவன் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 155/1, வாசல வீதி, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 09-04-2025 புதன்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கபட்டு அதனை தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்காக வைக்கபட்டு, ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


வீடு – குடும்பத்தினர்
 +94771520259

Related Articles