KarainagarObituaryWellawatte

திருமதி. நாகம்மா பாபறா  சண்முகநாதன்

காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும் கந்தானை, கிளிநொச்சி மற்றும் வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா பாபறா சண்முகநாதன் அவர்கள் 01-09-2022 வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து (கந்தானை பிரபலவர்த்தகர்) பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்ற சண்முகநாதனின் (லண்டன்) ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை (கந்தானைக் கந்தையா) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஸ்ரீ றோஜஸ் (லண்டன்), ஓப்றி ஸ்ரீகுமார் (கந்தானை), ரெவொர் றஞ்சன் (லண்டன்), லன்பிறாங் ஹரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,டாக்டர். ஞானரஜனி (லண்டன்), ஸ்ரீதேவி (லண்டன்), மாதங்கி-சாயி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சனாத், வினோத், விஷாலா, ஹரிசன், ஹரிணி, ஹரித்தா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,காலஞ்சென்றவர்களான பரமநாதன், நற்குணம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகளுக்குரிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், சுற்றத்தார் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

ஸ்ரீ றோஜஸ் – மகன்
+94 77 742 4324
ரஞ்சன்- மகன்
 +44 79 600 07623
ஹரன் -மகன்
   +1 416 618 8705
 
சாயி- மருமகள்
  +1 647 291 0349
பபி – மருமகள்
  +44 75 4825 3422

Related Articles