JaffnaObituary

திருமதி நடராசா சிவபாக்கியம்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை சேமமடு 2ஆம் யூனிட்டை வசிப்பிடமாகவும், தற்பொழுது இருபாலை வீதி, கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா சிவபாக்கியம் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நயினாதீவு மருதடியார் நாகலிங்கம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான புங்குடுதீவ நடுவுதுரித்தி இரத்தினம் (தாடி பெரியார்) – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவரத்தினம், யோகரெத்தினம் (H.A.R), ஜெயரெத்தினம், ரவீந்திரன், இரஞ்சிதமலர், புஸ்பராஜன் (செல்வன்), கலைச்செல்வி, கலைவாணி, காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, பாலேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், 

அரியதுரை, சந்திராதேவி, மங்கையற்கரசி, அரியபுத்திரன், யோகேந்திரன், றன்சிதன், ராகினி, புனிதவதி, உதயகுமாரி, காலஞ்சென்ற காரளசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், மயில்வாகனம், பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், மயில்வாகனம், தெய்வேந்திரம், சொர்ணம்மா, பூபதி மற்றும் யோகம்மா, கனகம்மா, புவனேஸ்வரி, கமலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேரப்பிள்ளைகளையும், பூட்டப்பிள்ளைகளையும் கொண்டவராவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-12-2024 வௌ்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோண்டாவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

முகவரி:- 

இருபாலை வீதி, கோண்டாவில்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகரெத்தினம் (H.A.R) 
 +94 75 269 8174
புஸ்பராஜன் (செல்வன்)
 +94 74 055 1167

Related Articles