GermanJaffnaObituaryPungudutivu

திருமதி மலர்விழி ஸ்ரீபத்மநாதன்

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hanover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மலர்விழி ஸ்ரீபத்மநாதன் அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் சிவபாக்கியம்(யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி தங்கமுத்து(யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான குணசிங்கம்(யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்), புவனேஸ்வரி(ஜேர்மனி) தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் ஸ்ரீபத்மநாதன்(ஸ்ரீ, Hanover) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஜதுஷன், மிதுஷன், மதுஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மதியழகன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

பரிசினி மதியழகன் அவர்களின் அன்பு மச்சாளும்,

மாதேஸ், சுதேஸ், சதேஸ், உதேஸ், அபிலாஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

சிவகாமி அவர்களின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீகரன் ஜெயகெளரி தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,

துரைச்சாமி, புஸ்பவதி(Berlin), காலஞ்சென்ற பரமலிங்கம், செல்வலட்சுமி, மகாலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சரோஜினிதேவி, சொர்ணலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற ஈஸ்வரி, அமிர்தலிங்கம், பரமேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

ஸ்ரீகாந்தன்(கனடா), சுதா(லண்டன்), அருள்மொழி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சுனிதா, ஜீவகுமார், செந்தில்நாதன் ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பிள்ளைகள்.

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 06 Mar 2025 10:00 AM – 2:00 PM
Stadtfriedhof Lahe Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany

தொடர்புகளுக்கு

ஜதுஷன் ஸ்ரீபத்மநாதன் – மகன்

 +4915206285684

Related Articles