
யாழ். வறுத்தலைவிளான், கொழும்பு வெள்ளவத்தை No.111, மெனிங் பிளேசை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவி நடராசா அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா தையல்நாயகிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
N.I.N.S. நடராசா அவர்களின் அன்பு மனைவியும்.
Dr.ராஜகணேஷ், ரமேஷ், திருமதி ராதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமானந்தம், தேவகி, குமாரசுவாமி, குமாரவேலு, மகேஸ்வரி ஆகியோரின் ஆருயிர் இளைய சகோதரியும்,
அமிர்தவர்ஷினி, மாதினி, சுகந்தன் ஆகியோரின் மாமியாரும்,
தேஜாஷ்வினி, தேஜோநாராயணி, பிரனிஷன், உதிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2023 வியாழக்கிழமை அன்று காலை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பி.ப 04:30 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| N.I.N.S. நடராசா – கணவர் | |
![]() ![]() | +94112508331 |
| Dr.ராஜகணேஷ் – மகன் | |
![]() ![]() | +94777536767 |
| ரமேஷ் – மகன் | |
![]() ![]() | +447405991868 |
| ராதா – மகள் | |
![]() ![]() | +447916508190 |





