
யாழ். கொடிகாமம் பெரியநாவலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமசிவம் கமலாதேவி அவர்கள் 02-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, சரஸ்வதிப்பிள்ளை ஆகியோரின் சிரேஸ்ட புதல்வியும்,
பரமசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாமினி, சியாமினி(லண்டன்), வினோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆனந்தரமேஸ், லட்சுமிகாந்தன்(லண்டன்), பகீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்னபூரணம், அகிலேஸ்வரி(கனடா) ஆகியோரின் மூத்த சகோதரியும்,
விநாயகமூர்த்தி, சிறிஸ்காந்தராசா(கனடா), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டர்ஷிதன், ராகவி, கம்சவி(லண்டன்), டனுசா, அபிசயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, வேவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| குடும்பத்தினர் – உறவினர் | |
![]() ![]() | +94774310808 +94718049335 |





