JaffnaObituarySrilanka

திருமதி குணரத்னம் நாகேஸ்வரி

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வதிவிடமாகவும் கொண்ட குணரத்னம் நாகேஸ்வரி அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாசியர் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமச்சந்திரன், சிவசுப்ரமணியம், காலஞ்சென்றவர்களான அருள்வேல், நவமணி, ஐஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குணரத்னம் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயரூபி, ஹம்சத்வனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெகதீஸ்வரன், துசித்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரமித்தியா, சாய் பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜீவருபி, சாந்தரூபி, பகீரதன், ஸ்ரீதரன், ஆனந்தரூபி, ஞானரூபி ஆகியோரின் சிறியதாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஹம்சத்வனி – மகள்
 +94777353580

துசித்குமார் – மருமகன்
 +94777562795

Related Articles