ColomboObituaryTellippalai

திருமதி கௌரிமனோகரி விக்னராசகுகன்

யாழ் வறுத்தலைவிளான் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி  கௌரிமனோகரி விக்னராசகுகன் அவர்கள் 31-03-2023ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நல்லையா இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விக்னராசகுகன் அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தியகௌரி அவர்களின் பாசமிகு தாயாரும்,

பிரபாகரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

ஜனகனின் பாசமிகு பேத்தியாரும்,

வள்ளிநாயகி அவர்களின் அன்புச் சகோதரியும்,

விக்னராஜா அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை 05-04-2023ம் திகதி புதன்கிழமை காலை 8.00 மணிமுதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஈமைக்கிரியைகள் நடைபெற்ற பின்னர் முற்பகல் 11.00 மணிக்கு தகனக்கிரியைக்களுக்காக தெகிவளை கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
0112 364 475

Related Articles