AvarangalMallakamObituary

திருமதி தேவகி சண்முகநாதன்

யாழ். மல்லாகத்தை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் 10ம் கட்டையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தேவகி சண்முகநாதன் அவர்கள் இன்று. 23/11/22 புதன்கிழமை இறைபாதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னார் அமரர்களாகிய செல்லத்துரை கனகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், அமரர்களாகிய கிருஷ்ணர் செல்லம்மா ஆகியோரின் மருமகளும், சண்முகநாதன் ( முன்னாள் அச்சுவேலி பல நோக்கு கூட்டுறவு சங்கம் நிர்வாகி) அவர்களின் அன்பு மனைவியும் , தம்பிராசா, மனோகரி, காலம் சென்ற அமரர் செல்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் , அனுசூயா, சிவகஜன்( முகாமையாளர் தெல்லிப்பளை) , அகல்யா ஆகியோரின் அன்புத் தாயாரும், குணரத்தினம், குணராதிகா, கெங்காசுதன் ஆகியோரின் மாமியாரும், கஜாளன், வத்ஸாங்கன், அஷ்மிதன், அக்ஸயா, கிருஷவன், கரிஷ்னா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (24.11.2022) வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் முற்பகல் 10 மணியளவில் நடைபெற்று பூதவுடல் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 சிவகஜன் ( கஜன் ) மகன்
 +94 (77) 009 2049
 +94 (77) 444 0298

Related Articles