ObituarySanguveliUrumpirai

திருமதி சிரோன்மணி கந்தசாமி

சங்கு வேலியைப் பிறப்பிடமாகவும்,  பலாலி வீதி உரும்பிராய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிரோன்மணி கந்தசாமி நேற்று  (21.11.2022) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான  தர்மலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,  காலஞ்சென்ற கந்தசாமியின் அன்பு மனைவியும், மற்றும் கிரிஷா (தாதியர் பொறுப்பு உத்தியோகத்தர், ICU யாழ். போதனா வைத்தியசாலை), யுதிஸ்டிரன், ஹர்ஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சந்திரகுமார் (தாதியர் பொறுப்பு உத்தியோகத்தர் OPD ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை), சாலினி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியும்,  ஹரிராம்,  முகுந்ராம்,  பிருந்தன்,  கிசான், அபிஷா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,  காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி,  குலசேகரம், மற்றும் அன்னலட்சுமி,  அல்லிராணி,  காலஞ்சென்ற முத்துரதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  காலஞ்சென்றவர்களான இந்திராணி,  தேவராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் (24.11.2022) வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.  இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :- குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
  0771822183

Related Articles