ColomboNainativuObituary

திரு வேலுப்பிள்ளை கருணாகரன்

யாழ். நயினாதீவு 15 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 06, 28 அலெக்சாண்டர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கருணாகரன் அவர்கள் 20-02-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற கனகசபை, அன்னப்பிள்ளை(கரம்பொன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி(இளைப்பாறிய பிரதம மருந்தாளர்) அவர்களின் ஆரூயிர் கணவரும்,

பிரதீபன், பிரசன்னா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகம்மா, பாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஜயகுலராணி, மதுரலிங்கம், காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலேந்திரா, மகேந்திரன், வித்தியாவதி மற்றும் காலஞ்சென்றவர்களான பரிமளபாக்கியம், இந்திராவதி, அம்பிகாவதி, சந்திராவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கரிஷ்மா, மயங்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-02-2023 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 23-02-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து ந.ப 12:30 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலினி- மருமகள்
 +6591462890
பிரசன்னா – மகன்
 +94742183283
பிரதீபன்- மகன்
+6597361195 

Related Articles