ColomboObituaryPungudutivu

திரு சிவராஜா சின்னத்துரை

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா சின்னத்துரை அவர்கள் 22-08-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(ஆசிரியர்) மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகலக்ஷ்மி அவர்களின் அருமை கணவரும்,

சிவபிரியா(Medical Nurse- Swiss), தீபா காயத்திரி(பிரித்தானியா), சிந்துஜா(Managing Director- UK), கார்த்திகா(Financial Accountant- UK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவநிதி, காலஞ்சென்ற சரவணபவன், சிறிதேவி, விக்கினேஸ்வரன், திருமகள், மங்களேஸ்வரி, சிறிராமன், இலக்ஸ்மணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவிசங்கர், மணிவண்ணன், Dr. சஞ்சீவன்(Senior Structural Engineer & Managing Director), Dr கீர்த்தன்(Associate Professor of Structural Engineering) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பாலவிவேகானந்தர் மற்றும் இந்திராணி, நவமணி, திருச்செல்வம், கிருஷ்ணமூர்த்தி, சசிகலா, லலிதாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கணேஷ், மனோன்மணி மற்றும் குணபாலலக்ஷ்மி, வரதலக்ஷ்மி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கனகலிங்கம், சரஸ்வதி மற்றும் மகாதேவன், வடிவேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சேரன், கீர்த்திகன், அஷ்வின், கிறிஷ்னி, நிவேதன், கிறிஷான், அபிஷான், கவின், ஆதின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-08-2022 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்படும், 25-08-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கார்த்திகா – மகள்
  +447853856590

Related Articles