KaithadyMadduvilObituary

திரு சாணையன் பொன்னையா

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு, சுவிஸ் Yverdon-les-Bains ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சாணையன் பொன்னையா அவர்கள் 07-10-2022 வெள்ளிக்கிழமை அன்று மட்டுவிலில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாணையன் நாகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பொடி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவி(ஜேர்மனி), ராதா(சுவிஸ்), ஈசன்(சுவிஸ்), நாதன்(சுவிஸ்), வனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயா(ஜேர்மனி), துரைசிங்கம்(சுவிஸ்), சுனீத்ரா(சுவிஸ்), குமுதினி(சுவிஸ்), புலேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, நாகமுத்து, மீனாட்சி, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்பு மைத்துனரும்,

பிரகாஷ்(ஜேர்மனி), பிரியங்கா(ஜேர்மனி), பிரியங்கன்(ஜேர்மனி), நர்மதன்(சுவிஸ்), நவீன்(சுவிஸ்), நதீசன்(சுவிஸ்), யனோஷா(சுவிஸ்), சனுஜன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

வேணுஷா(சுவிஸ்), அனுஷா(சுவிஸ்), பூஜா(சுவிஸ்), ஆதிஸ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

பவரூபன்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பேரனும்,

விகானி(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சின்னத்தூ இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
+94770701604 

Related Articles