ColomboObituaryVelanai

திரு பேரம்பலம் சிவசுப்ரமணியம்

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.59, குமாரசாமி வீதி, கந்தர்மடம், இல. 94/12, விவேகானந்த மேடு, கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  பேரம்பலம் சிவசுப்ரமணியம் அவர்கள் 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வல்லிபுரம், யோகம்மா  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயலட்சுமி சிவசுப்ரமணியம் அவர்களின் பாசமிகு கணவரும்,

Dr. சிவதாஸ்(உளமருத்துவ நிபுணர், யாழ். போதனா வைத்தியசாலை), ஜெயந்தி, Dr. சண்முகதாஸ்(NHSL), வசந்தி(Australia), சுகந்தி(Audit Officer, NIBM) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. சிவனேஸ்வரி(NHSL), காலஞ்சென்ற குகானந்தா, Dr. வனிதா(DGH, Kilonochchi), கோணேஸ்வரன்(Australia), அருணோதயன்(Australia) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிநயா, கோகுலன், தனுஷன், பிரணவன், விவேகா, ஸ்ரீமன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, மயில்வாகனம், பராசக்தி, சரஸ்வதி, சண்முகரட்ணம், சுப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் 05-10-2022 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 06-10-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்ப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 வீடு – குடும்பத்தினர்
+94773420538

Related Articles