இந்தியா – திருச்சி மாவட்டம் வடக்கு நந்தமங்களம் கிராமத்தினைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துசாமிப்பிள்ளை தங்கராஜா அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று அதிகாலை 1:00 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துசாமிப்பிள்ளை – உண்ணாமலை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை – தனலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,
ஜெகதாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
யோகேஸ்வரி (கொழும்பு), தர்ஷினி (கொழும்பு), செந்தூரன் (ATB Financial – கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஏகாம்பரம் (புஸ்பா ஜீவலர்ஸ் – நீர்கொழும்பு), வளர்மதி (நீர்கொழும்பு), கஸ்தூரி (நீர்கொழும்பு), மகேஸ்வரி (கொழும்பு), செல்வராஜா (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும்,
இராமநாதன் (நீர்கொழும்பு), காலஞ்சென்ற சத்தியமூர்த்தி (நீர்கொழும்பு), உமாபதி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும்,
சரஸ்வதி, பவானி ஆகியோரின் கொழுந்தனாரும்,
ரவி நடேசன் (Innova Metal, கொழும்பு-12), நவக்குமரன் (Daya Electrical, கொழும்பு – 11, Lumizo Pvt (Ltd), கொழும்பு – 04), சத்யா (ATB Financial – கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நீர்கொழும்பைச் சேர்ந்த கணேசலிங்கம், மகாலிங்கம், நகுலேஸ்வரன், இந்திராணி, உமாதேவி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும், நடராஜா (நீர்கொழும்பு), திருச்செல்வம் (கொழும்பு) ஆகியோரின் சகலையும்,
காலஞ்சென்ற தேவராஜ் – சரோஜா (கொழும்பு-15), காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை – சரஸ்வதி (கொழும்பு), காலஞ்சென்ற கந்தசாமி – ஜெயந்தி (கொழும்பு) ஆகியோரின் சம்பந்தியும்,
செந்தில், புஷ்பா, கோபிநாத் ஆகியோரின்சித்தப்பாவும்,
துர்கா, மயூரன், சுவேத்தா ஆகியோரின் பெரியப்பாவும்,
பிரகதி, ஷஷ்டிக் ஆகியோரின் பாட்டனாரும்,
தனுஷன், லிதுர்ஷன், ஜெய்பிரதீஷ் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2025 சனிக்கிழமை முற்பகல் 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட்டு, 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
+94 77 299 9975
+94 76 748 0326