JaffnaObituaryPungudutivu

திரு மார்க்கண்டு தர்மலிங்கம் (தறுமு அண்ணா)

யாழ். புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும், பாண்டியன்குளம் நட்டாங்கண்டலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு தர்மலிங்கம் அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், மார்க்கண்டு முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கோபாலபிள்ளை இலட்சுமிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினம்(சிவன்சோலை), காலஞ்சென்றவர்களான செல்வம்(வேலணை), அமிர்தலிங்கம், புஷ்பராணி மற்றும் குகதாசன்(உருத்திரபுரம்), ஜோதீஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பிறேமலதா, பிறேமதயா, பிறேமசீலன், பிறேமநந்தன், பிறேமநகுலன், காலஞ்சென்ற ராதிகா, ரதிச்செல்வி, ரேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமரதாஸ், றஞ்சன், உஷாநந்தினி, தர்ஷா, வினோதா, சூரியகுமார், ராசன் ஆகியோரின் மாமனும், குகதாஸ், சிந்துஜா, கபில்தாஸ், தஜதாஸ், காலஞ்சென்ற ஈழதாஸ், பிரபாலினி, கயல்விழி, சங்கமி, பிரதீபன், பிரியதர்ஷினி, பிரியங்கன், நிஷா, இறைக்கலைஞன், இறைக்கதிர், விஸ்ணுகா, விஸ்னுப்பிரியன், சுடர் நிலவன், கதிர் நிலவன், கதிரவன், தர்சன், சர்மி, கபிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பிரித்திவ், அஸ்வித் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2024 செவ்வாய்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பாண்டியன்குளம் நட்டாங்கண்டல் பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

நந்தன் – மகன்
 +94767402021

ஜோதீஸ்வரன்(ஈசன்) – சகோதரன்
 +33688556127

Related Articles