
யாழ. அச்செழுவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கர் செல்லத்துரை அவர்கள் 14-10-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கர், தையல்நாயகி(சேதுப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரலீலா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா(அன்னம்மா), இராசதுரை(குமாரவேல்), செல்லப்பாக்கியம், இரத்தினம் மற்றும் இராசா, சின்னையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாநிதி, நித்தியானந்தம்(கனடா), சுகந்தினி, தர்சாயினி(சுவிஸ்), ஜெயந்தினி, கேதாரணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருந்தவராசா, அருந்ததி(கனடா), சந்திரகுமார், கணேஸ்வரன்(சுவிஸ்), ஹிரிசாந்தன், பிரகாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜீவன், வருணன் கஜேந்தினி, கதீசன், அனுசா(சுவிஸ்), அபிசா(சுவிஸ்), அபிசனா(சுவிஸ்), ஆரவி, ஜனுஸ்கா(கனடா), சானுயா(கனடா), துஷானி, கிந்துசன், அனீஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2023 புதன்கிழமை மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்செழு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| தயாளன் – மகன் | |
![]() | +94742067188 |





