KadduvanObituary

திரு கதிரித்தம்பி சீவரத்தினம்

யாழ். தண்ணீர்த்தாழ்வு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஊரங்குணை கட்டுவனை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி சீவரத்தினம் அவர்கள் 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரத்தம்பி நாகம்மா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற முத்துத்தம்பி, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீஸ்(கனடா), பிரமிளா(ஆசிரியை கொழும்பு இந்துக் கல்லூரி), பிரசாந்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோகுலவர்மன்(பொறியியலாளர்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

நவரத்தினம்(கனடா), இலட்சுமி, சரஸ்வதி, சிவமணி, ஜெயரத்தினம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பகுமாரி(கனடா), காலஞ்சென்றவர்களான ஜெயரூபநாதன், ஜெயமோகன், சற்குணநாதன் மற்றும் விஜி(பிரான்ஸ்), மதியாபரணம்(கனடா), நல்லம்மா(கனடா), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோகுலவர்மன் – மருமகன்
  +94773580826
பிரசாந் – மகன்
  +33699896604

Related Articles