
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வதிவிடமாகவும் கொண்ட தேவரத்தினம் மனுவேற்பிள்ளை அவர்கள் 01-03-2024 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் பாசமிகு பெறாமகளும்,
ஞானரத்தினம்(ஒலிவர்), காலஞ்சென்றவர்களான மேரி அக்னஸ்(கிளி), அன்ரனி லீயோ போல்(பொன்னு) மற்றும் மேரி திரேசா(சாந்தி) ஆகியோரின் மைத்துனியும்,
நியூட்டன், ஆனந்தராசா, அருள்நேசன், அன்ரனிராஜன், ராஜினி ஆகியோரின் சகோதரியும்,
ஜெஸ்லின், சுபராஜ், சியாமளின், ஜொஹான், சன்சியா, டாசியா, கனிசியா, கௌதமன், கௌசிகா ஆகியோரின் பெரியம்மாவும்,
ஜுடிற், ஜெனி, ஆஞ்சலோ, சிந்துஜா, ஜதுசன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-03-2024 சனிக்கிழமை முதல் 04-03-2024 திங்கட்கிழமை வரை யாழ்ப்பாணம் வைற் ஹவுஸ் மலர்ச்சாலை(180 பிரதான வீதி, யாழ்ப்பாணம்) எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 05-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று சுண்டுக்குளி இல்லத்தில் (76/1A, கண்டி வீதி, யாழ்ப்பாணம்) பார்வைக்காக வைக்கப்படும். 06-03-2024 புதன்கிழமை அன்று இளவாலை இல்லத்தில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று, பி.ப 03:00 மணியளவில் புனித அன்னம்மாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் புனித அன்னம்மாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஒலிவர் – மைத்துனி | |
![]() ![]() | +94766696112 |
சாந்தி – மைத்துனி | |
![]() ![]() | +94713447806 |
| அன்ரனிராஜன் – சகோதரன் | |
![]() ![]() | +94706767878 |
| சுபன் – பெறாமகன் | |
![]() ![]() | +94766758005 |
| கௌதமன் – பெறாமகன் | |
![]() ![]() | +94706767876 |





