திருமதி மாணிக்கவாசகர் செல்லம்மா

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் செல்லம்மா அவர்கள் 28-02-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுரு சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவபாலச்சந்திரன், ஜெயபாலச்சந்திரன், தவபாலச்சந்திரா, தனபாலச்சந்திரன், குணபாலச்சந்திரன், லோகபாலச்சந்திரன், யோகபாலச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஐயன் கோவிலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| தனா மாணிக்கவாசகர் – மகன் | |
![]() ![]() | +14167285772 |
| ஜெயா மாணிக்கவாசகர் – மகன் | |
![]() ![]() | +16477052815 |
| குணம் மாணிக்கவாசகர் – மகன் | |
![]() ![]() | +16476415659 |
| லோகன் மாணிக்கவாசகர் – மகன் | |
![]() ![]() | +14167089903 |
| பிருந்தாபன் – பேரன் | |
![]() ![]() | +94777776750 |
| ராஜன் – பேரன் | |
![]() ![]() | +94777705036 |





