
புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சாரதாம்பாள் கருணாகரன் அவர்கள் நேற்று முன்தினம் ( 22 .02.2022 ) செவ்வாய்க் கிழமை யாழ். மருத்துவமனையில் காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கொழும்பு ஆயர் வீதி வர்த்தகர் ஆர். எம். சின்னத்தம்பி முத்தம்மா தம்பதிகளின் அருமை மகளும் புங்குடுதீவு மணியம் ஸ்ரோர்ஸ் சுப்பிரமணியம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும் பிரபல சமூகத்தொண்டர் வர்த்தகர் காலஞ்சென்ற கருணாகரன் அவர்களின் அன்புத் துணைவியாரும் சுகிர்தா, கலையரசி, முரளிதரன், நாவலன் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்) குணாளன் ஆகியோரின் அருமைத் தாயாரும் காலஞ்சென்ற துவாரகாதரன், வேந்தன் மற்றும் கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும் பானுமதி. சற்குணம், சத்தியபாமா , இராமச்சந்திரன் , நகுலேஸ்வரன், உலகேஸ்வரன் ஆகியோரின் சகோதரியும் ஜெயராஜசிங்கம், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், சபாரத்தினம், மற்றும் கலாநிதி, இந்திராணி, சித்ரா, காலஞ்சென்றவர்களான கருணாகடாட்சம், திருநாவுக்கரசு, கோபாலபிள்ளை, புவனேஸ்வரி, தியாகராஜா, வில்வரத்தினம் (புலவர்), மற்றும் பரமேஸ்வரி, லீலாவதி ஆகியோரின் மைத்துனியும் ஆசினி, ஹரிணி, எழினி, தமிழ் நிலவன், தமிழ் எழிலன், ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் சாரதா இல்லத்தில் இன்று [27.02.2022] ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும்.அதன் பின்னர் புங்குடுதீவு மணற்க்காடு இந்து மயானத்தில் தகனக்கிரியைகள் நண்பகல் 12 மணிக்கு இடம்பெறும் என அறியத்தருகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
கண்ணகை அம்மன் கோவில் வீதி.
10 ம் வட்டாரம், புங்குடுதீவு.
| தொடர்புகளுக்கு | |
| நாவலன் | |
![]() ![]() | +9477 716 8755 |
| குணாளன் | |
![]() ![]() | +9477 894 5856 |





