திருமதி கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி

திருமதி கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி, திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 20-10-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் நவமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கருணானந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி கருணானந்தசாமி புஷ்பாஞ்சலிதேவி, அவர்கள் ஜெயந்தி, மகேஸ்வரன்(கனடா), சத்தியா(ஓய்வுநிலை ஆசிரியை), தேன்மதி(ஜேர்மனி), தனலக்சுமி(பிரித்தானியா), மணிவண்ணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுரேந்திரன், காலஞ்சென்றவர்களான ஜெயந்தி, தேவதாஸ் மற்றும் விஜயசுந்தரம்(ஜேர்மனி), வரதராசன்(பிரித்தானியா), அருணா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சபேசன்- பார்ஹவி, மிரேஷ், அம்பிகைராஜ்- வைஷாலி, ஹாசினி, எனோத், சங்கவி, சஜித், நிரஞ்சன், அன்பகன், திலீபன், பகலவன், சுடரவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஸோபிகா, யாதவ், அக்ஷரா, விராஜ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
புவிராஜசிங்கம், வசந்தாதேவி, றமணஹரி, திருமலைதேவி, குமுதினி, சுரேஸ், காலஞ்சென்ற உஷாராணி ஆகியோரின் அன்பு அக்காவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2021 வியாழக்கிழமை அன்று இல. 38 வன்னியார்வீதி இல்லம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| ஜெயந்தி – மகள் | |
![]() ![]() | +94262220477 |
| சுரேஸ் – மருமகன் | |
![]() ![]() | +94774119354 |
| மகேஸ்வரன் – மகன் | |
![]() ![]() | +15144313466 |
| மணிவண்ணன் – மகன் | |
![]() ![]() | +15142972121 |
| மதி – மகள் | |
![]() ![]() | +4917676733456 |
| லக்சுமி – மகள் | |
![]() ![]() | +447846555264 |





