யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லை அம்பலவாணர் கோபாலகிருஸ்ணன் அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலவாணர் – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற ஜெகநாதன் – சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுதாஜினி (ஆசிரியை -யாழ். சோமாஸ்கந்தக் கல்லூரி, புத்தூர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
துவாரகன், தமிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சம்பந்தன், விமலன் (பணிப்பாளர் – வடமாகாணம் காணி சீர்திருத்த ஆணைக்குழு) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சுகுமார்-ஜெயசிறி (ஜேர்மனி), தற்பரன் (சட்டத்தரணி), றமிலாதேவி, நளினி, சந்தானலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-05-2025 புதன்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் புத்தூர் கிந்துசிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் | |
077 780 5394 |
குடும்பத்தினர் | |
077 773 3058 |