ColomboJaffnaObituarySrilanka

திருமதி சரஸ்வதி நடராஜா

யாழ். தொல்புரம் வடக்கம்பரையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி நடராஜா அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற துரையப்பா நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தம் சண்முகராசா, சீனிவாசகம், பொன்னுதுரை, இராமநாதன், கைலைநாதன் மற்றும் கனகாம்பிகை, தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சாந்தினி மற்றும் மாலினி, Dr.வசந்தினி, Dr.மேனகா, சிவசக்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராமநாதன், சோமஸ்கந்தன், குலசிங்கம், உமாதேவா, முரளிகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

Dr.அபிராமி, Dr.மால்மருகன், Dr.ஆரணி, சரவணன், இசானி, இசாந்த், சங்கவி, Dr.சுகிதரன், Dr.அபிநாவ், Dr.ஷாலினி, லிண்டல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆர்த்தி, அஸ்வின், லாஷ்யா, ஆதியா, சூரியா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரை 591 காலி வீதி, தெகிவளை- கல்கிசை எனும் முகவரியில் அமைந்துள்ள மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

முரளி நவரத்தினம் – மருமகன்
 +16478683243

இராமநாதன் – மருமகன்
+94779022900
மாலினி – மகள்
 +61413264147

Related Articles