ColomboJaffnaObituarySrilanka

திருமதி மகாலட்சுமி அரசரட்ணம்

யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலட்சுமி அரசரட்ணம் அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், Dr. அரசரட்ணம்(ஓய்வுபெற்ற பிரதி மாகாணப் பணிப்பாளர், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம், வடகிழக்கு மாகாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நடராசா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

அரவிந்தன்(அவுஸ்திரேலியா – முன்னாள் முகாமையாளர் NDB வங்கி, அஜெந்தன்(கணக்காளர் – பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சர்மிளா(அவுஸ்திரேலியா, முன்னாள் DFCC வங்கி உத்தியோகத்தர்), அபர்ணா(வைத்தியர் – பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நேசரத்தினம், தனலட்சுமி, காலஞ்சென்ற சண்முகநாதன்(முன்னாள் கட்டிட பட வரைஞர் கட்டிட இலாகா), செந்தில்நாதன்(ஓய்வுபெற்ற வரி மதிப்பாளர்- உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கொழும்பு), சரவணபவன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவானந்தன்(முன்னாள் ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரநாதன்(இளைப்பாறிய பிரதி ஆணையாளர் உள்நாட்டு இறைவரித் திணைக்களம்), காலஞ்சென்ற லீலாவதி, சுகிர்தமலர், காலஞ்சென்ற பேரம்பலம்(ஓய்வுபெற்ற துறைமுக அதிகாரசபை திருகோணமலை), காலஞ்சென்ற வல்லவாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அக்‌ஷரா, அபிநவ், ஆதிரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


Dr. அரசரட்ணம் – கணவர்
 +94718323246
அரவிந்தன் – மகன்
+94777569919
அஜெந்தன் – மகன்
+94777563765

Related Articles