திரு சுப்பிரமணியம் சிவதாசன்
பருத்தித்துறை ஐயனார் கல்லடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவதாசன் அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திலகவதி(ஓய்வு நிலை ஆசிரியர் கொ/இரத்மலானை இந்துக்கல்லூரி, நைஜீரியா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சி.சுப்பிரமணியம் (நில அளவையாளர்), குலமணி தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்ற அருள்தாசன், சிவநாயகி மாணிக்கவாசகர், காலஞ்சென்றவர்களான ஜெகதாசன், குலதாசன் மற்றும் அருள்நாயகி பாலசிங்கம், ஜெயநாயகி சிவகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான புனிதவதி திருநாவுக்கரசு, சரஸ்வதி சிவபாலசிங்கம், பத்மாவதி அருளானந்தம்பிள்ளை, லீலாவதி ராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-02-2025 புதன்கிழமை அன்று மு.ப 08:00 முதல் மு.ப 11.30 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்ககிரியைகள் நடைப்பெற்று பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயநாயகி சிவக்குமாரன் – சகோதரி | |
+94710477127 |