JaffnaObituarySrilankaVavuniya

திருமதி யோகராணி விஸ்வநாதன்

யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி விஸ்வநாதன் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (ஒட்டோஸ் மணியம்) கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (மாமடு மணியம்), சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகளும்,

விஸ்வநாதன்(நில அளவையாளர் – சவூதி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஷிராணி(ஆசிரியை – வ/ பெரிய கோமரசன்குளம் ம.வி), தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசரூபன்(பொறியியலாளர் – கொழும்பு) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

மித்ரா(வ/ இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் தரம் 7 மாணவி) அவர்களின் ஆசை அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான அருந்தவ ஈஸ்வரி(பேபி), சந்திர லீலா(பபா – ஆங்கில ஆசிரியை) மற்றும் கதிர்காம தேவி (குஞ்சு – ஆசிரியை), மகாலக்ஷ்மி(ராசு ஜேர்மனி), ரவிச்சந்திரா(சூட்டி லண்டன்), காலஞ்சென்ற ரட்ணேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், சிவபாலன்(ஆங்கில ஆசிரியர்) மற்றும் சிவானந்தன்(லண்டன்), சிவாம்பிகை(கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 
+94242220353

வீடு – குடும்பத்தினர்
 
 +94776451950

Related Articles