JaffnaObituarySrilankaVelanai

திரு துரைச்சாமி ஸ்ரீஸ்கந்தராஜா

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி அமராவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனேஷ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

லவன், காலஞ்சென்ற கவிதா, குகதாஷன்(அவுஸ்திரேலியா), துருசிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரியதர்சினி, உஷாந்தினி, ஸ்ரீபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சாந்தராசா, சாந்தலட்சுமி(கனடா), காலஞ்சென்றா விசாகராசா, தியாகேஷ்வரன், காலஞ்சென்ற உதயசூரியன், உதயேஸ்வரன், கோடீஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரதராசா, காலஞ்சென்ற தர்மலிங்கம், பாலசிங்கம், கனகேஷ்வரி(கண்ணம்மா), தில்லைச்சிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வானுஜன், பவித்திரன், சாருஜன், மகிஷன், வாகீஷன், யதுஷன், கவிஷன், ரக்‌ஷன், சபிக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை மேற்கு அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குகா – மகன்
+61405657588
துருசிலா – மகள்
+94764908821
சாந்தலட்சுமி – சகோதரி
 +14165641564
கோடீஸ்வரன் – சகோதரன்
 +61416237995

Related Articles