
யாழ் நவுண்டில் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், இடைக்குறிச்சி கொடிகாமத்தைப் வசிப்பிடமாகவும் கொண்ட திரு மயில்வாகனம் குகதாசன் அவர்கள் 22-07-2023ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் நாகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான மெய்கண்டதேவர் பராசக்திப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்திதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன், சுலக்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பார்வதி, மௌலியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலா, ஆதவ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
வசந்தா, சண்முகநாதன், சாரதா, யோகதாசன், கிருஷ்ணதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தேவகுமாரி அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 25-04-2023ம் திகதி செவ்வாய்கிழமை மு.ப 9.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மு.ப 10.30 மணியளவில் முள்ளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| குடும்பத்தினர் | |
.![]() | +94 77 773 0221 |





