Jaffna

திருமதி தம்பிராசா பொன்னம்மா

யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா பொன்னம்மா அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நாகமுத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்லம்மா, சின்னத்தங்கம், காலஞ்சென்றவர்களான தம்பிராசா, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, தங்கம்பிள்ளை, செல்வநாயகி, சிவபாக்கியம் ஆகியோரின் மைத்துனியும்,

திருநாவுக்கரசு(ஈசன்), கமலாகரன்(இந்து, சுவிஸ்), கமலராணி(வசந்தா), காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுமதி, தயாளினி(சுவிஸ்), முருகதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜனந்தன்(பிரான்ஸ்), தர்சிகா(சுவிஸ்), கஜந்தன, வாகினி(கனடா), மிதிலா, நிரூஷன், டிலக்‌ஷன்(பிரான்ஸ்), நிலாணி(சுவிஸ்), செந்துஜன்(சுவிஸ்) ஆகியோரின் பேத்தியும்,

சந்தோஸ்(சுவிஸ்), ஹிர்ஷானி, நிதிஷ்(கனடா), ஆதிஷ்(கனடா), கிருத்விக்(சுவிஸ்) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொட்டுப்பள்ளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-
காங்கேசன்துறை வீதி,
மல்லாகம்.
(காங்கேயன் பேக்கரி அண்மையில்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
+94772313091

Related Articles