
யாழ் மீசாலை வடக்கு மீசாலை சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி ஓய்வுபெற்ற பிரதி அதிபருமான திரு வேலுப்பிள்ளை நாகராசா அவர்கள் இன்று 04-03-2023ம் திகதி சனிக்கிழமை அதிகாலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தவனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளக்கொடி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற நாகம்மா, இராசரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கேதீஸ்வரன் (ஆசிரியர் மீசாலை வீரசிங்கம் மத்தியகல்லூரி), அனுசா (அவுஸ்ரேலியா), ரேவதனி, வாசுகி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோகிலா (ஆசிரியர் நாவற்குழி மகாவித்தியாலயம்), முருகானந்தன் (பொறியியலாளர், அவுஸ்ரேலியா), பிரணவன் (உதவிப்பதிவாளர் பட்டப்படிப்புகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), மனோராஜ் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷாந், லக்சயன் (மாணவர்கள், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி), தணிகேசன் (மருத்துவர் அவுஸ்ரேலியா), தாரணி (மருத்துவ பீட மாணவி, அவுஸ்ரேலியா ), காயத்திரி(கலைப்பீட மாணவி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), கஜானன்(மாணவன், கொக்குவில் இந்துக்கல்லூரி), சோமியா, கபீசன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-03-2023ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வேம்பிராய் இந்து
மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
மீசாலை வடக்கு
மீசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு





