
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு கருவேலடி லேனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நவமணி அவர்கள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான லட்சுமணர் கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, மதியாபரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா(திருநாவுக்கரசு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தவமணி, நவரட்ணம்(உடுவில்), காலஞ்சென்ற சிங்கரட்ணம்(முன்னாள் கொ.இ.க) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசேந்திரம், இராசதேவி, வசந்தராசன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணரத்தினம், சாந்தகுமாரி(இளைப்பாறிய உப அதிபர், பெ.புலம் ம. வித்தியாலயம்), நந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லவன்- கருணிகா, மதீசன், விதுஷா- ஜனகராஜ், அபிரா- நிதர்ஷன்(ஜேர்மனி), விதுசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| வசந்தன் – மகன் | |
![]() ![]() | +491772951700 |
| லவன் – பேரன் | |
![]() ![]() | +94766982431 |





